கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக 100 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Fri, 11 Sept 2020 10:10:55 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,916 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 052 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,45,606 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,916 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,016 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.