Advertisement

நாகை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Tue, 23 June 2020 6:29:59 PM

நாகை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா உறுதி

நாகை மாவட்டத்தில் ஏற்கனவே 202 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,coronavirus,nagai district,treatment,influence ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,நாகை மாவட்டம்,சிகிச்சை,பாதிப்பு

நாகை மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் 202 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் 16 பேர் சென்னை மற்றும் கேரளாவில் இருந்து நாகை வந்தவர்கள் ஆவர். புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. இதில் 84 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :