Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 16 July 2020 3:32:40 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

pudukkottai district,corona virus,infection,treatment,deaths ,புதுக்கோட்டை மாவட்டம், கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 780 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 463 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 825-ஆக உயர்ந்துள்ளது.

Tags :