திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு கரோனா உறுதி
By: vaithegi Wed, 12 Apr 2023 12:32:25 PM
திருச்சி:நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது . இந்த நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று காரணமாக 7 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மட்டும் 9 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இவர்களில் 7 பேர் கர்ப்பிணிகள். இவர்கள் அனைவரும் பிற உடல் நல பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணிகள் 7 பேர் உட்பட 9 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
எனினும் மேலும் ஒரு வாரம் அவர்கள் தொடர் கண்காணிப்புக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என மருத்துவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.