தேனி மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதி
By: Monisha Tue, 21 July 2020 10:33:44 AM
தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 2,607 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 2,607 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 132 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,733 ஆக அதிகரித்துள்ளது. தேனியில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை 684 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.