Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Mon, 20 July 2020 3:27:16 PM

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 860 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 35 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 860 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

thiruvaru district,corona virus,infection,death,treatment ,திருவாரூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இதற்கிடையே, பேரளம் பகுதியை சேர்ந்த பெண் வருவாய் ஆய்வாளர், அவருடைய கணவர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மன்னார்குடி பகுதியை சேர்ந்த 8 பேர், குடவாசல் பகுதியை சேர்ந்த 7 பேர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய பகுதியை சேர்ந்த தலா 3 பேர், திருவாரூர், வலங்கைமான் பகுதியை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 35 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதியானது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 895 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 89 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 251 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|