Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Tue, 14 July 2020 10:23:16 AM

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்துள்ளது.

thiruvarur district,corona virus,infection,death,treatment ,திருவாரூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னையை தொடர்ந்து தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவள்ளுர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 817 ஆக அதிகரித்துள்ளது. திருவாரூரில் சித்த மருத்துவர், 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 415 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|