Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 17 June 2020 1:23:19 PM

தமிழகத்தில் மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்து உள்ளது .

இந்த நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சில அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது.

tamil nadu,corona virus,vp kalairajan,dmk,corona confirmed ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,விபி கலைராஜன்,திமுக,கொரோனா உறுதி

திமுக இலக்கிய அணி செயலாளர் விபி கலைராஜன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முன்னாள் தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த விபி கலைராஜன், ஜெயலலிதா மறைவிற்குப் பின் டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். அதன்பின் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த விபி ராஜனுக்கு இலக்கிய அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|