Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 25 June 2020 10:50:01 AM

திருவாரூர் மாவட்டத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 272 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆகரித்துள்ளது.

நேற்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள். மொத்தம் 866 பேர் உயிரிழந்துள்ளனர்.

thiruvarur district,coronavirus,doctors,vulnerability,treatment ,திருவாரூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,மருத்துவர்கள்,பாதிப்பு,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 272 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் 2 மருத்துவர்கள், 2 காவலர்கள் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 284ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

Tags :