Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 16 July 2020 10:44:23 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது.

corona virus,infection,death,treatment,kanyakumari district ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,கன்னியாகுமரி மாவட்டம்

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,892 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 596 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

Tags :
|