Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாத்தான்குளம் கொலைவழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி

சாத்தான்குளம் கொலைவழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Tue, 28 July 2020 09:31:18 AM

சாத்தான்குளம் கொலைவழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி

சாத்தான்குளம் பகுதியில் காவலர் விசாரணையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் உட்பட் 10 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.

satankulam,murder case,police,arrest,corona confirmed ,சாத்தான்குளம்,கொலைவழக்கு,காவலர்கள்,கைது,கொரோனா உறுதி

இந்த நிலையில், விசாரணை நடத்திவந்த 8 சிபிஐ அதிகாரிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் சிபிஐ அதிகாரிகளுக்கு உதவி செய்த மதுரை சிபிஐ அதிகாரிக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|