- வீடு›
- செய்திகள்›
- 18 சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு கொரோனா உறுதி; டில்லி விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள்
18 சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு கொரோனா உறுதி; டில்லி விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள்
By: Nagaraj Wed, 27 May 2020 11:54:48 AM
சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், 18 பேர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணியில் இருந்தவர்கள்.
தொற்றுக்குள்ளானவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கண்டறியப்பட்டு வருகின்றனர். இப்படை பிரிவில், தற்போது, 78 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவதுடன், 132 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில், இதுவரை, 207 அதிகாரிகள் உள்ளிட்ட, 1,889 போலீசார், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு அதிகாரி உள்ளிட்ட, 20 பேர் இறந்துள்ளதுடன், 67 அதிகாரிகள் உள்ளிட்ட, 838 பேர், பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
மும்பை மற்றும் நாசிக் புறநகர் பகுதிகளில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.