Advertisement

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா 12 ஆயிரத்தை கடந்தது

By: vaithegi Sat, 22 Apr 2023 1:34:43 PM

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா 12 ஆயிரத்தை கடந்தது

இந்தியா: இந்தியாவில் நேற்று 11,692 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 5,31,258 லிருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,72,256 லிருந்து 4,42,83,021 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,இந்தியா,கொரோனா

மேலும், நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,66,37,581 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,602 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் இடையில், நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|