Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்தாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்தாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

By: Monisha Mon, 20 July 2020 1:30:39 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்தாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

chengalpattu district,corona virus,infection,death,treatment ,செங்கல்பட்டு மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 9,658 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,114 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
|