தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் உச்சம் அடைந்த கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sun, 26 July 2020 10:30:47 AM
தமிழகத்தில் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது கொரோனா பாதிப்பு. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் 93,537 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று
அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 185
பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,975 ஆக
அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கன்னியாகுமரி இடலாகுடியை சேர்ந்த 71
வயது முதியவர் பலியான நிலையில் அங்கு இறப்பு எண்ணிக்கை 35 ஆக
உயர்ந்துள்ளது.