Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு; 6472 பேருக்கு உறுதியானது

சென்னையில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு; 6472 பேருக்கு உறுதியானது

By: Nagaraj Thu, 23 July 2020 8:13:07 PM

சென்னையில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு; 6472 பேருக்கு உறுதியானது

உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 6472 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 6000 க்கும் அதிகம் என்ற புதிய உச்சம் பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

tamil nadu,corona,upsapatsam,chennai,experiment ,தமிழகம், கொரோனா, உச்சபட்சம், சென்னை, பரிசோதனை

இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6472 பேர்களில் 1336 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,900 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையிலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3232 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 5210 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். குணமானோர் எண்ணிக்கை 1,36,793 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 60,375 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,57,869 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Tags :
|