Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற பலருக்கு கொரோனா பாதிப்பு

ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற பலருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 10 Oct 2020 5:27:33 PM

ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற பலருக்கு கொரோனா பாதிப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டது.

corona damage,condolences,family,hadras teen ,கொரோனா சேதம், இரங்கல், குடும்பம், ஹத்ராஸ் இளம்பெண்

இந்நிலையில் மருத்துவக்குழுவினர் அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். அப்போது, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்ற மருத்துவர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற, உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் என பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags :
|