தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!
By: Monisha Fri, 09 Oct 2020 09:37:52 AM
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 88 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 718 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 454 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:-
அரியலூர் - 43
செங்கல்பட்டு - 584
சென்னை - 3,351
கோவை - 479
கடலூர் - 244
தர்மபுரி - 32
திண்டுக்கல் - 171
ஈரோடு - 96
கள்ளக்குறிச்சி - 99
காஞ்சிபுரம் - 341
கன்னியாகுமரி - 230
கரூர் - 41
கிருஷ்ணகிரி - 75
மதுரை - 395
நாகை - 87
நாமக்கல் - 86
நீலகிரி - 29
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 146
ராமநாதபுரம் - 120
ராணிப்பேட்டை - 167
சேலம் - 365
சிவகங்கை - 122
தென்காசி - 145
தஞ்சாவூர் - 195
தேனி - 183
திருப்பத்தூர் - 106
திருவள்ளூர் - 573
திருவண்ணாமலை - 240
திருவாரூர் - 78
தூத்துக்குடி - 123
திருநெல்வேலி - 200
திருப்பூர் - 154
திருச்சி - 156
வேலூர் - 261
விழுப்புரம் - 100
விருதுநகர் - 214
விமானநிலைய கண்காணிப்பு -1