Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,232 ஆக அதிகரிப்பு; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,232 ஆக அதிகரிப்பு; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Fri, 24 July 2020 09:26:36 AM

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,232 ஆக அதிகரிப்பு; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 210 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:-
அரியலூர் - 3
செங்கல்பட்டு - 214
சென்னை - 1,947
கோவை - 28
கடலூர் - 21
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 28
ஈரோடு - 8
கள்ளக்குறிச்சி - 16
காஞ்சிபுரம் - 80
கன்னியாகுமரி - 22
கரூர் - 9
கிருஷ்ணகிரி - 13
மதுரை - 183
நாகை - 1
நாமக்கல் - 3
நீலகிரி - 2
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 17
ராமநாதபுரம் - 53
ராணிப்பேட்டை - 21
சேலம் - 20
சிவகங்கை - 31
தென்காசி - 7
தஞ்சாவூர் - 17
தேனி - 41
திருப்பத்தூர் - 6
திருவள்ளூர் - 188
திருவண்ணாமலை - 42
திருவாரூர் - 1
தூத்துக்குடி - 26
திருநெல்வேலி - 15
திருப்பூர் - 6
திருச்சி - 50
வேலூர் - 39
விழுப்புரம் - 31
விருதுநகர் - 37

Tags :