Advertisement

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,494 ஆக அதிகரிப்பு

By: Monisha Mon, 27 July 2020 09:21:43 AM

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,494 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 471 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில், மாநிலத்தில் நோய் தொற்று தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு பலியானோர் விவரம்:-
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 227
சென்னை - 2,011
கோவை - 39
கடலூர் - 21
தர்மபுரி - 3
திண்டுக்கல் - 35
ஈரோடு - 8
கள்ளக்குறிச்சி - 19
காஞ்சிபுரம் - 89
கன்னியாகுமரி - 32
கரூர் - 9
கிருஷ்ணகிரி - 14
மதுரை - 210
நாகை - 3
நாமக்கல் - 5
நீலகிரி - 2
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 21
ராமநாதபுரம் - 57
ராணிப்பேட்டை - 28
சேலம் - 23
சிவகங்கை - 33
தென்காசி - 12
தஞ்சாவூர் - 18
தேனி - 48
திருப்பத்தூர் - 9
திருவள்ளூர் - 208
திருவண்ணாமலை - 51
திருவாரூர் - 1
தூத்துக்குடி - 29
திருநெல்வேலி - 25
திருப்பூர் - 6
திருச்சி - 58
வேலூர் - 43
விழுப்புரம் - 32
விருதுநகர் - 57

Tags :