Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோயால் தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்களின் விகிதம் உயரும் - ஐ.நா. அறிக்கை

கொரோனா நோயால் தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்களின் விகிதம் உயரும் - ஐ.நா. அறிக்கை

By: Karunakaran Fri, 04 Sept 2020 1:14:51 PM

கொரோனா நோயால் தெற்காசிய நாடுகளில் வறுமையில் வாடும் பெண்களின் விகிதம் உயரும் - ஐ.நா. அறிக்கை

ஐ.நா. சபையில் கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பாலின சமத்துவம் என்ற தலைப்பில்,அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. பெண்கள் மற்றும் ஐ.நா. வளர்ச்சி திட்டம் சார்பில் நேற்று முன்தினம் தாக்கலான இந்த அறிக்கையில், கொரோனாவால் தெற்காசியாவில் பாலின வறுமை இடைவெளி இன்னும் மோசம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், பெருந்தொற்றால் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் உயரும். 25-34 வயதுக்குட்பட்ட ஆண்களை விட அதிகமான பெண்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் இருப்பார்கள். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், 2021-க்குள் 4 கோடியே 70 லட்சம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கடும் வறுமையில் தள்ளிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona disease,poverty,south asian women,un ,கொரோனா நோய், வறுமை, தெற்காசிய பெண்கள், ஐ.நா.

உலகிலேயே கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 87 சதவீதம் பேர் வசிக்கிற மத்திய மற்றும் தெற்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வறுமை மேலும் அதிகரிக்கும். தெற்காசியாவில் வறுமை பெருக காரணம், பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆகும். கொரோனா காலத்துக்கு முன்பாக 2021-ம் ஆண்டில் தெற்காசியாவில் வறுமையில் வாடும் பெண்கள் விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது.

மேலும் அந்த அறிக்கையில், அடுத்த ஆண்டில் உலகளவில் 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற அளவில் ஏழைகள் இருப்பார்கள். 2030-ல் இது 100 ஆண்களுக்கு 121 பெண்கள் என்ற அளவுக்கு மேலும் உயரும். 25-34 வயதினரில், 100 ஆண்களுக்கு 118 பெண்கள் என்ற விகிதாசாரம் தெற்காசியாவில் இருக்கும். இதுவே 2030-ல் 100 ஆண்களுக்கு 129 பெண்கள் என்ற அளவுக்கு அதிகரிக்கும். உலகளவில் பெண்கள் வறுமை விகிதம் 2019-2021 இடைவெளி 2.7 சதவீதம் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கொரோனாவால் இடைவெளி 9.1 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :