கொரோனாவுக்கான ரெம்டெசிவரை தயாரிப்பதில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
By: Nagaraj Wed, 06 May 2020 3:22:02 PM
ஐதராபாத்: ரெம்டெசிவர் மருந்தினை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் இந்தியாவிற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இந்த மருந்து கொரோனா பாதித்தவர்களுக்கு அபாய கட்டத்தில் உதவியாக இருக்கக் கூடிய ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
KSMs எனப்படும் இந்த மருந்துக்கான முக்கிய வேதிப்பொருள்களை ஐதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி வெற்றிகரமாக தொகுத்துள்ளது.
சிப்லா உள்ளிட்ட மருந்து தயாரிப்பாளர்களிடம் இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெம்டெசிவர் மருந்தை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அதன் காப்புரிமை வைத்துள்ள கிளியட் சயின்ஸ் நிறுவனத்திடம் அனுமதி கோரப்படும்.
ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் கட்டாய உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அது உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.