Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குன்னூர் கொலக்கம்பையில் 9 போலீசாருக்கு கொரோனா ஆரம்ப அறிகுறி

குன்னூர் கொலக்கம்பையில் 9 போலீசாருக்கு கொரோனா ஆரம்ப அறிகுறி

By: Nagaraj Thu, 25 June 2020 8:58:51 PM

குன்னூர் கொலக்கம்பையில் 9 போலீசாருக்கு கொரோனா ஆரம்ப அறிகுறி

9 போலீசாருக்கு கொரோனா... குன்னூர் கொலக்கம்பையில், 9 போலீசாருக்கு, கொரோனா ஆரம்ப அறிகுறிகள் இருந்ததால் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதில், கொலக்கம்பை அருகே தைலமலை, தூதூர் மட்டத்தில் இருவருக்கு தொற்று உறுதியானது. ஒருவர் சிகிச்சை பெற்று திரும்பினார்.

coonoor,police,corona,station,taluk office ,குன்னூர், போலீசார், கொரோனா, ஸ்டேஷன், தாலுகா அலுவலகம்

இந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொலக்கம்பை போலீஸ் ஸ்டேஷனில், சப் - இன்ஸ்பெக்டர் உட்பட, 9 பேருக்கு கொரோனா ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. அருகில் இருந்த போலீசார் குடியிருப்புகளில், சுகாதார துறையினர் வருவாய் துறையினர் பரிசோதனை மற்றும் ஆய்வை துவக்கியுள்ளனர். மேலூர் ஊராட்சியினர் சுகாதார பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதே போல குன்னூரில் வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு அறிகுறி தென்பட்டதால், ஆர்.ஐ. அலுவலகம், தாலுகா அலுவலகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.

Tags :
|
|