கேரளாவில் கொரோனா எதிரொலி பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
By: vaithegi Thu, 23 Mar 2023 12:13:20 PM
கேரளா: கொரோனா அதிகரிப்பதன் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து முந்தைய அளவுக்கு இல்லை மக்கள் எந்த வித அச்சப்பட தேவையில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களை அரசு அறிவுறுத்தி கொண்டு வருகிறது.
கேரளாவிலும் கொரோனா தொற்றானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்த மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனை அடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் 210 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
இதனால், கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.