Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

By: Nagaraj Sun, 12 July 2020 8:36:46 PM

தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா... தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 4,210 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 34 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.

laboratories,private,corona,experimental,laboratories ,ஆய்வகங்கள், தனியார், கொரோனா, பரிசோதனை, ஆய்வகங்கள்

சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,168 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 77,338 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 68 பேர் (அரசு மருத்துவமனை -43, தனியார் மருத்துவமனை -25) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 89,532 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 46,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 42,531 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 53, தனியார் ஆய்வகங்கள் 52 என மொத்தம் 105 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

Tags :
|