கனடாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு பதிவு
By: Nagaraj Tue, 24 Nov 2020 5:38:53 PM
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏழாயிரத்து 52பேர் பாதிக்கப்பட்டதோடு, 66பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக மூன்று இலட்சத்து 37ஆயிரத்து 555பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 11 ஆயிரத்து 521பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 56ஆயிரத்து
835பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 431பேரின்
நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
அத்துடன் இரண்டு இலட்சத்து 69ஆயிரத்து 199பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.