திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா
By: Nagaraj Fri, 03 July 2020 8:56:01 PM
கொரோனா உறுதியானது... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர், விஜிலென்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண பரத் குப்தா கூறுகையில், தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று கோவில் ஊழியர்களிலும் தினமும் 100 பேருக்கு பரிசோதனை
செய்யப்படுவதாகக் கூறிய அவர் கடந்த சில தினங்களில் 400 ஊழியர்களுக்கு
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பக்தர்களில்
ஒருவருக்குக் கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.
இதனிடையே திருமலைக்கு ஒருமுறை பணிக்கு வரும் ஊழியர்கள் அடுத்த 7 நாட்கள்
வரை கீழே இறங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.