Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேட்டில் குப்பைகளை அகற்றிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோயம்பேட்டில் குப்பைகளை அகற்றிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Thu, 21 May 2020 1:04:43 PM

கோயம்பேட்டில் குப்பைகளை அகற்றிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றும் சுகாதாரப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த நான்கு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் கடந்த 5ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் உள்ள குப்பையை அகற்றும் பணியில், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் 10 பேர் நெற்குன்றம், அழகம்மாள் நகரில் வசித்து வந்தனர்.


coimbatore,market,trash,employees,4 people ,கோயம்பேடு, மார்க்கெட், குப்பைகள், ஊழியர்கள், 4 பேர்

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்ட, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர், கிரேன் ஆப்பரேட்டர், வாகன பொறுப்பாளர் என, நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தங்கியிருந்தவர்களுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags :
|
|