Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கைதிகள் 5 பேருக்கு கொரோனா; புழல் சிறையில் கொரோனா சோதனை நடத்த முடிவு

கைதிகள் 5 பேருக்கு கொரோனா; புழல் சிறையில் கொரோனா சோதனை நடத்த முடிவு

By: Nagaraj Fri, 29 May 2020 1:11:55 PM

கைதிகள் 5 பேருக்கு கொரோனா; புழல் சிறையில் கொரோனா சோதனை நடத்த முடிவு

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் தற்போது புழல் சிறையில் இருந்து மற்ற சிறைகளுக்கு சென்ற கைதிகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அடுத்து புழல் சிறையில் கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

prisoners,prison prison,action,fear,corona impact ,கைதிகள், புழல் சிறை, நடவடிக்கை, அச்சம், கொரோனா பாதிப்பு

சிறைக்கைதிகளில் சிலர் கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த சிறைகளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் புழல் சிறையில் இருந்து கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து சென்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களிடம் பழகிய 74 கைதிகள், 19 காவலர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என்றும் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கைதிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

Tags :
|
|