Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 24 June 2020 5:00:34 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,826 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது.

tiruvallur district,coronavirus,influence,treatment ,திருவள்ளூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,826 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,917 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் அதிகபட்சமாக ஆவடியில் 19 பேருக்கும், சோழவரத்தில் 14 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் திருவள்ளூர் மாவட்டம் உட்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை அமலில் உள்ளது.

Tags :