Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெண் தாசில்தார்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு; சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள்

பெண் தாசில்தார்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு; சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள்

By: Nagaraj Thu, 14 May 2020 11:07:55 AM

பெண் தாசில்தார்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு; சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள்

2 பெண் தாசில்தார்களுக்கு கொரோனா... கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்த, மேலும், இரண்டு பெண் தாசில்தார்கள் உட்பட, மூவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில், ஏப்ரல் மாதம் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த இரண்டு தாசில்தார்கள், இரண்டு வருவாய் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் பணியாற்றியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டனர்.


2 female dasildar,corona,vulnerability,claim,collector ,2 பெண் தாசில்தார், கொரோனா, பாதிப்பு, கோரிக்கை, கலெக்டர்

தொடர்ந்து, தடுப்பு பணியில் ஈடுபடும், அலுவலர்களுக்கு, சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கலெக்டர் அலுவலகத்தில் தொற்று ஏற்பட்ட நபர்களுடன் பணியாற்றிய, இரண்டு பெண் தாசில்தார்கள் உட்பட, மூவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சக ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து மற்ற பணியாளர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Tags :
|
|