Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெலிக்கட சிறைக்கைதிகளுக்கு கொரோனா இல்லை; ஜெனரல் ஷவேந்திர சில்வா தகவல்

வெலிக்கட சிறைக்கைதிகளுக்கு கொரோனா இல்லை; ஜெனரல் ஷவேந்திர சில்வா தகவல்

By: Nagaraj Thu, 09 July 2020 10:00:17 AM

வெலிக்கட சிறைக்கைதிகளுக்கு கொரோனா இல்லை; ஜெனரல் ஷவேந்திர சில்வா தகவல்

கொரோனா தொற்று இல்லை... வெலிக்கட சிறைச்சாலையிலுள்ள எந்தவொரு கைதிக்கோ அல்லது அதிகாரிக்கோ கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என்பது என்பது உறுதி செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். எனினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

welikada,pcr examination,no corona,prisoners ,வெலிக்கட, பிசிஆர் பரிசோதனை, கொரானா இல்லை, கைதிகள்

குறித்த அறிக்கைகள் இன்று (9ம் தேதி) கிடைக்கும் எனவும் இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது கூறியுள்ளார். வெலிக்கட சிறைச்சாலையின் கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானவராக நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டார். அவருக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பது இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை.

இதனால் அனைத்து பிரிவுகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :