இங்கிலாந்தில் கொரோனா முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு
By: Nagaraj Mon, 13 July 2020 5:36:35 PM
கட்டுப்பாடுகளில் தளர்வு... இங்கிலாந்தில் கொரோனா முடக்கநிலை கட்டுப்பாடுகள், மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் எளிதாக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு, அழகு நிலையங்கள், ஸ்பாக்கள், டாட்டூ நிலையங்கள், நகம் பராமரிக்கும் நிலையங்கள் ஆகியன திறக்கப்பட்டுள்ளன. ஆனால், முகத்தின் முன் நேரடியாக செய்யக்கூடிய வேலைகள், கண் இமை, புருவம் த்ரெட்டிங், போன்ற சில வேலைகள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதனால் பல நிலையங்களை மீண்டும் திறக்க முடியவில்லை.
ஸ்கொட்லாந்தில் உட்புற வணிக வாளகங்கள் மீண்டும் திறக்க
அனுமதிக்கப்படுகின்றன. வேல்ஸில், பப்கள், மதுபான சாலைகள் மற்றும் உணவகங்கள்
வாடிக்கையாளர்களுக்கு வெளியில் சேவை செய்யத் தொடங்கலாம். அதே நேரத்தில்
சிகையலங்கார நிபுணர்களும் மீண்டும் திறக்கலாம்.
கொரோனா வைரஸின்
பரவலைக் குறைக்க வணிகங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் முடிதிருத்தும் நிலையங்கள்
திறக்கப்பட்டதில் இருந்து தாடி டிரிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அது
எளிமையான, மெல்லிய நேர்த்தியானதாக இருக்கவேண்டும்.