தென்கொரியாவில் இதுவரை 32,318 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Fri, 27 Nov 2020 2:22:41 PM
மேலும் 583 பேருக்கு கொரோனா... தென்கொரியாவில், இன்று புதிதாக 583 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை, ஒரு நாளில் பதிவான மிக அதிகமான எண்ணிக்கை அது. தலைநகர் சோலில் பெரும்பாலான புதிய சம்பவங்கள் பதிவாயின. அதனால் சோல் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் பாதுகாப்பு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தென்கொரியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவல் குறைந்தவுடன்,
கட்டுப்பாடுகள் உடனே தளர்த்தப்பட்டதால் மூன்றாம் கட்டக் கிருமிப்பரவல்
ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ராணுவ வசதிகள் சில, கிருமித்தொற்று
இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் ஆயுதப் படையினரிடம் 10 நாள்
விடுப்பில் செல்லும்படி கூறப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் இதுவரை 32,318 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 515 பேர் இறந்துள்ளனர்.