Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Wed, 01 July 2020 10:37:02 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,419 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாநிலம் முழுவதும் மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 74 அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.

corona virus,vulnerability,curfew,treatment,death ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,ஊரடங்கு,சிகிச்சை,பலி

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,419 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,528 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,661 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|