Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 18 June 2020 6:12:54 PM

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 163 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,193 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 27,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 576-ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,coronavirus,chennai,thiruvarur district,influence ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,திருவாரூர் மாவட்டம்,பாதிப்பு

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு நாளை முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 163 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :