இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sun, 05 July 2020 2:43:24 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ரஷியாவில் 6,74,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், இந்தியா ரஷியாவை நெருங்கியுள்ளது.
பிரேசில் 15,78,376 எண்ணிக்கையுடன் 2-வது இடத்திலும், 29,35,770 எண்ணிக்கையுடன் அமெரிக்கா முதல் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 613 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் 4,09,083 பேர் குணமடைந்துள்ளனர்.