Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 05 July 2020 4:56:31 PM

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா தொட உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்து உள்ளனர். 14,856 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளன.

corona,india,increase,ramanathapuram,tamil nadu ,கொரோனா, இந்தியா, அதிகரிப்பு, ராமநாதபுரம், தமிழகம்

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 1,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 359 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,354-ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது தெரிய வந்துள்ளது.

அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் இறுதிசடங்கில் கலந்து கொண்ட உறவினர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
|
|