டில்லியில் புதிதாக 2,948 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sat, 27 June 2020 7:51:42 PM
டில்லியில் புதிதாக 2,948 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 66 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம், குணமடைவோரின் விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டில் வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்கள் பட்டியலில், மஹாராஷ்டிரா, முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி டில்லி, இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், டில்லியில் புதிதாக 2,948 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு
உள்ளனர். இதையடுத்து, இங்கு வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 80
ஆயிரத்து, 188 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 66 பேர் பலியானதையடுத்து,
மொத்த பலி 2,558 ஆக உயர்ந்துள்ளது. 28 ஆயிரத்து, 329 பேர் சிகிச்சைப்
பெற்று வருகின்றனர். 49 ஆயிரத்து, 301 பேர் குணமடைந்து உள்ளனர்.