இன்றும் தமிழகத்தில் கொரோனா உச்ச அளவை எட்டும் அபாயம்
By: Nagaraj Fri, 26 June 2020 6:53:35 PM
இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற நிலை... தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று (ஜூன் 25) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பும் 71 ஆயிரத்தை நெருங்கியது. முதன்முறையாக 3 ஆயிரத்தை தாண்டியது மட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் உச்ச அளவை எட்டியது.
இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மதுரை
மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,449 ஆக
உயர்ந்துள்ளது. அதேபோல், வேலூரில் இன்று 147 பேருக்கு கொரோனா தொற்று
கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,013 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில்
169 பேருக்கும், செங்கல்பட்டில் 240 பேருக்கும், தேனியில் 32 பேருக்கும்
இன்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்றைய உச்ச அளவை போல
இன்றும் 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு பதிவாகும் என தெரிகிறது.