Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 150 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 150 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Fri, 17 July 2020 4:03:02 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 150 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,891 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 82 ஆயிரத்து 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

kanyakumari,corona virus,infection,treatment,deaths ,கன்னியாகுமரி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,891 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,041 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 612 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :