கொரோனா பாதித்த தாய் குழந்தைக்கு பாலூட்டலாம்; ஆய்வில் தகவல்
By: Nagaraj Mon, 09 Nov 2020 9:07:57 PM
கொரோனா பாதித்த தாய் குழந்தைக்கு பாலூட்டினால் தொற்று பரவாது என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
தாய்ப்பால் என்ற அமிர்தமம் ஒரு அருமருந்து. உலகத்தில் எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரு சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஒரு உணவாகும். குழந்தை சிறு வயதிலேயே கொடுக்கும் தாய்ப்பால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் வலிமையை தர வல்லது என மக்கள் நம்புகிறார்கள். அந்த அளவுக்கு ஒரு சக்தி வாய்ந்த அமிர்தம் தாய்ப்பால்.
பிறந்த குழந்தையின் குறிப்பிட்ட பருவத்தில் இதனை சரியாக குழந்தைக்கு ஊட்ட வேண்டும். கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்பது உலகம் முழுக்க இருந்த பொதுவான சந்தேகமாகவே இருந்து வந்தது.
ஆனால், இந்த கொரோனா வைரஸும் கூட தாய்- சேய் பிரிவின் வலையை உணர்ந்திருக்குமோ என்னவோ... தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும், அவர்கள் தாய்ப்பால் தந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.
இந்த ஆய்வின் அடிப்படையில், கொரோனா பாதித்த தாய்மார்கள் தயக்கமின்றி
தாய்ப்பால் கொடுக்கலாம் என ஆறுதலான செய்தி ஒன்றையும் உலக சுகாதார நிறுவனம்
அண்மையில் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் தாய்ப்பாலில் கலக்குமா என்று
பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டதில், தாய்ப்பால் மூலம் இந்த வைரஸ் பரவாது'
என்றே தெரிவிக்கிறது. அதனால், Covid19 தொற்றால் பாதித்த தாய், தான்
குழந்தைக்கு தாய்ப்பால் தாராளமாக தரலாம். முதலில் அந்தக் குழப்பம்
தாய்மார்களுக்கு வேண்டியதில்லை. அதேநேரத்தில் அதை எப்படி கொடுக்க வேண்டும்
என்பதில்தான் கவனம் தேவை.
ஏனெனில், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு
பரவாத கொரோனா வைரஸ் தொற்று, தாய்ப்பால் கொடுக்கும்போது, மிகவும் நெருக்கமாக
இருப்பதால், மூச்சுவிடுதல் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே,
கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பால் கொடுக்கும் முன்
கிருமிநாசினி அல்லது சோப்பு மூலம் நன்றாக கழுவி விட்டு, மார்பை சோப்பு
போட்டு கழுவி தண்ணீரால் துடைத்து விட்டு, முடிந்தால் கையுறை மாட்டி,
தாய்ப்பால் தரலாம்.