Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

By: Nagaraj Sun, 19 July 2020 8:23:48 PM

இந்தியாவில் ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா... நாடு முழுவதும் ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 லட்சத்து 77 ஆயிரத்து 618 ஆக அதிகரித்தது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 26,273 -ஆக அதிகரித்தது. நாட்டில் தொடர்ந்து 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் 30,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 38,902 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 543 போ உயிரிழந்தனா். இதனால், ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,816-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona,38 thousand people,india,one day,vulnerability ,கொரோனா, 38 ஆயிரம் பேர், இந்தியா, ஒரே நாள், பாதிப்பு

3,73,379 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,77,423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,00,937 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஜூலை 18- ஆம் தேதி வரை 1,34,33,742 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 3,61,024 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags :
|
|