தேனியில் புதிதாக 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
By: Monisha Mon, 20 July 2020 11:20:22 AM
தேனியில் ஏற்கனவே 2,494 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தேனியில் இன்று ஒரே நாளில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 2,494 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,622 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,175 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.