Advertisement

கம்பஹாவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Sun, 04 Oct 2020 11:49:57 AM

கம்பஹாவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பெண்ணொருவருக்கு கொரோனா... கம்பஹாவில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

experiment,female,corona,vulnerability,loneliness,action ,பரிசோதனை, பெண், கொரோனா, பாதிப்பு, தனிமை, நடவடிக்கை

இதன்போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அதற்கமைய கம்பஹா வைத்தியசாலை ஊழியர்கள் 15 பேர் மற்றும் அந்த பெண் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags :
|
|