Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று புதிதாக 2, 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 2, 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 02 Nov 2020 9:10:52 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 2, 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதாக 2, 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 29 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|