Advertisement

தமிழகத்தில் புதிதாக 2, 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 31 Oct 2020 09:29:16 AM

தமிழகத்தில் புதிதாக 2, 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 011 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 924 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது.

Tags :