Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 12 Oct 2020 10:15:34 AM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோன வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 221 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 ஆயிரத்து 46 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 6 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 81 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

virudhunagar district,corona virus,infection,treatment,kills ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,753 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 1,383 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 3 ஆயிரத்து 46 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

மாவட்ட சுகாதார துறையினர் தொடர்ந்து முழுமையான மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளியிடாத நிலை தொடர்வதால் மாநில பட்டியலுக்கும், மாவட்ட பட்டியலுக்கும் முரண்பாடு தொடர்கிறது. இந்த முரண்பாடை நீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கிராம பகுதிகளிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் கிராமப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :