உத்தரகண்ட் ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதியானது
By: Nagaraj Mon, 23 Nov 2020 10:05:05 AM
ஆளுநருக்கு கொரோனா... உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளையும், பிரபலங்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில், உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியாவுக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்ட பதிவில், "கொரோனா சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்
அறிகுறியில்லாமல் இருக்கிறேன், எந்த பிரச்சனையும் இல்லை. டாக்டர்களின்
மேற்பார்வையின் கீழ் நான் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். கடந்த சில
நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து
எச்சரிக்கையாக இருங்கள், உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்." என்று
பதிவிட்டுள்ளார்.