சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று
By: Nagaraj Mon, 03 Aug 2020 12:20:42 PM
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு களப்பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளும் தப்பவில்லை. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக கவர்னர் மாளிகை ஊழியர்கள் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கவர்னருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கும்
கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில்
இன்று சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால்
மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கார்த்தி
சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் தொண்டர்கள்
அதிர்ச்சியில் உள்ளனர்.